20 பிப்ரவரி 2012

நற்செயல் #5


  لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا                                      
"நீங்கள் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள். பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள் ; 
இன்னும் மனிதர்களுக்கு அழகானதை சொல்லுங்கள்"   [2:83]

நீங்கள் உங்கள் பாவங்களை கட்டுபடுத்த வேண்டுமா? உங்கள் நாவினை கட்டுபடுத்துங்கள். நபி மொழி- "எவர் ஒருவர் தன் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதை பாதுகாக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் நிச்சயம்"  

இந்த காலகட்டத்தில் நிறைய பேசுவது ஒரு trend-ஆக மாறிவிட்டது. அதிலிலும் நல்ல வார்த்தைகள் அரிது. எத்தனை கெட்ட வார்த்தைகள் நம் உரையாடலில்! கிராமன் காதீபீன் பாவம்!

யோசியுங்கள்~ கியாம நாள் அன்று நாம் சொன்ன கெட்ட வார்த்தை பக்க பக்கமாக காண்பிக்க படும்போது, 

stupid      idiot
stupid      
idiot 
stupid    
idiot
stupid     idiot 
stupid     idiot 
stupid     idiot
''             ''
''             ''
நம் நிலைமை என்ன? 

அந்நாள் வரும்முன், உங்களை நீங்களே check செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் நீங்கள் பயன் படுத்தும் கெட்ட வார்த்தையை note செய்யுங்கள். அன்று அதனை எத்தனை முறை சொன்னீர்கள் என்றும் எழுதுங்கள். பொய் சொன்னீர்களா, எழுதுங்கள். புறம்பேசுநீர்களா, எழுதுங்கள். நல்ல விஷயங்கள் (அல்லாஹ்வை நினைவுகூர்ந்து ) பேசுநீர்களா? எழதுங்கள். 

நிச்சயமாக, மாற்றத்தை உணர்வீர்கள்.
உங்களுக்கு எளிமையான வழி வேண்டுமா?  - "பேசுவதை குறையுங்கள்"!!                                                             



                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக